தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு 100 அடி உயரத்திலிருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து 13 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் பயணிகள் பேருந்து ஒன்று சுமார் 100 அடி உயரத்திலிருந்து நர்மதை ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேரும் உயிரிழந்தனர். இந்த ஊரில் இருந்து புறப்பட்ட மகாராஷ்டிர மாநிலம் புனே நோக்கி சென்றுகொண்டிருந்தபோது தார் மாவட்டத்தில் உள்ள பலா த்தின் வழியே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரை உடைத்து சென்று நர்மதை ஆற்றில் கவிழ்ந்தது .மாநில பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளூர் மீனவர்கள் உடன் இணைந்து ஆற்று நீரில் இருந்து 13 சடலங்கள் எடுத்த நிலையில் பேருந்தில் மொத்தம் எத்தனை பேர் இருந்தார்கள் என தெரியாததால் தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
Tags :