உயிரிழந்த தந்தை போல மெழுகு சிலை வைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திய மகன்
சேலத்தில் உயிரிழந்த தனது தந்தை போல மெழுகு சிலை செய்து வைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியை மகன் நடத்தியுள்ளார். குகை பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் கொரோனா பாதித்து கடந்த ஆண்டு உயிரிழந்தார். ஆரோக்கிய இயேசு ராஜா தனது தந்தை முன்னிலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த விரும்பி பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவன உதவியுடன்மெழுகு சிலை செய்தர். பின்னர் மேடையில் வேட்டி சட்டை அலங்காரத்துடன் தந்தை சிலையை அமர வைத்து வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார்.
Tags :