வங்கிக்குள் துப்பாக்கியுடன் சென்ற சாமியார் கைது

by Editor / 19-09-2022 08:42:39pm
 வங்கிக்குள் துப்பாக்கியுடன் சென்ற சாமியார் கைது

திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்த திருமலை சாமிகள் என்பவர் இடி மின்னல் சங்கமம் என்கிற அமைப்பை நடத்தி வருகிறார்.அவரது முகநூல் பக்கத்தில் ஒரு துப்பாக்கியுடன் சென்று திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில் உள்ள சிட்டி யூனியன் வங்கி ஊழியர்களை மிரட்டியதுடன் அங்கேயே அமர்ந்து புகை பிடிக்கும் காட்சிகளை செல்போன் மூலம் அவரது முகநூல் பக்கத்தில்    நேரலையில் தற்போது வெளியாகி உள்ளது.இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக  பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தற்போது சாமியார் திருமலை கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via