டிக் டாக் மூலம் 2 பெண்களை காதலித்து திருமணம் செய்த இளைஞர்
ஆந்திர மாநிலம் நெல்லூர், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் 25 வயது இளைஞர். இவர் டிக் டாக் மூலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நட்பாக பழகி பின்னாளில் காதலாக மாறியது. ஆனால், இந்த இளைஞர் கடப்பாவை சேர்ந்த இளம்பெண்ணையும் காதலித்து வந்துள்ளார். அந்த 2 பெண்களையும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில், கடப்பாவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.இதனிடையே, நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பெண் அந்த இளைஞரை தேடி வீட்டிற்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். வீட்டை விட்டு ஓடி வந்து விட்டதால் மீண்டும் வீட்டிற்கு செல்ல முடியாது; என்னை 2-வதாக திருமணம் செய்துகொள் என வற்புறுத்தினார். இதுகுறித்து ஏற்கனவே திருமணம் செய்த முதல் மனைவியிடம் நடந்ததை கூறியதால், முதல் மனைவி 2வது திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டார். இதையடுத்து விசாகப்பட்டினம் இளம்பெண்ணை வாலிபர் 2-வதாக திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :