தொடரும் கனமழை வாகன ஓட்டிகள் கடும் அவதி

by Staff / 23-09-2022 10:51:31am
தொடரும் கனமழை வாகன ஓட்டிகள் கடும் அவதி

தலைநகர் டெல்லியில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. உத்தரபிரதேசம், அரியானா மாநில எல்லைகளில் அமைந்துள்ள குருகிராம், நொய்டா நகரங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக நகரின் பல்வேறு சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குருகிராம், நெய்டா, டெல்லியின் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால், அலுவலகம் செல்வோர், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கனமழை காரணமாக குருகிராம், நொய்டாவில் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via