முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்
இந்துக்களின் புனித ஸ்தலமாகவும் தீர்த்த முக்தி ஸ்தலமாக குற்றாலம் விளங்கி வருகிறது. இங்கு முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்களுடைய ஆத்மா சாந்தியடையும் என்ற நம்பிக்கையில் திதி மற்றும் தர்ப்பணம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று புரட்டாசி மாகாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரங்கணக்கான மக்கள் காலை முதலே குற்றாலம் மெயினருவியில் திரண்டுவந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
Tags :