பேக்கரி கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான.பேருந்து

by Staff / 08-10-2022 04:08:17pm
பேக்கரி கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான.பேருந்து

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள வீராச்சிப்பாளையத்தில் விவேகானந்தா மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி முடித்துவிட்டு 42 மாணவிகளுடன் கல்லூரி பேருந்து சென்றது. இந்நிலையில், கோவையிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சின்னாகவுண்டனூர் 4 ரோடு சந்திப்பில் வலது புறம் திரும்பி சங்ககிரி நோக்கி சென்றபோது, சேலத்திலிருந்து எதிரே வந்த கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

அப்போது கல்லூரி பேருந்து ஓட்டுநர் சண்முகம், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் பார்த்திபன் ஆகிய இருவரும் ஒரே திசையில் திருப்பியதால் அங்குள்ள பேக்கரி கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 42 கல்லூரி மாணவிகளும் சிறு காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

Tags :

Share via