பாஜகவுடன் இனி கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை - நிதீஷ்குமார்

by Staff / 15-10-2022 03:13:25pm
பாஜகவுடன் இனி கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை - நிதீஷ்குமார்

பாஜகவுடன் ஜேடியு ஒருபோதும் கூட்டணி அமைக்காது என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மகா கூட்டணியில் விரிசல் ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், சோசலிஸ்டுகளுடன் ஒத்துழைத்து முன்னேறுவோம் என்றும் தெளிவுபடுத்தினார்.

சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தவே பாஜக முயற்சிக்கிறது, நாட்டின் முன்னேற்றத்திற்காக எதையும் செய்யவில்லை. இனி என் வாழ்நாளில் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன். சமாஜ்வாடிகளுடன் இணைந்து பீகாருடன் நாட்டை முன்னேற்றுவேன் என நிதிஷ்குமார் கூறினார்.

1998ல் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றபோது மத்திய அமைச்சராக தேர்வு செய்யப்பட்டதை பாஜக மறந்து விட்டது. எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்தனர். இன்று மத்தியில் இருப்பவர்கள் முன்னேற்றத்திற்காக எதையும் செய்யவில்லை என்றும், திமிர்பிடித்தவர்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

 

Tags :

Share via