தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து, பள்ளி, கல்லுாரிகள் நாளைதிறப்பு.

by Editor / 25-10-2022 01:35:32pm
தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து, பள்ளி, கல்லுாரிகள் நாளைதிறப்பு.

தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.இதன் தொடர்ச்சியாக தமிழகம்உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும்,வெளிநாடுகளிலும் வசிக்கும் மக்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களது வசிப்பிடங்களில் இருந்து, சொந்த ஊர்களுக்கு, சென்றனர்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சென்று, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிபவர்கள், தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று, நேற்று தீபாவளியை கோலாகலமாக  கொண்டாடினர்.

இந்நிலையில், வெளியூர்களுக்கு சென்றவர்கள், தங்களது வசிப்பிடங்களுக்கு திரும்பி வரும் வகையில், பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்குமட்டும்  இன்று ஒருநாள்  விடுமுறை விடப்படுவதாக, தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, தீபாவளி விடுமுறை முடிந்து, பள்ளி, கல்லுாரிகள் நாளை திறக்கப்பட உள்ளன.இதனை முன்னிட்டு இன்றே தென்மாவட்டங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு வந்தவர்கள் பேரூந்துக்கள்,ரயில்கள் மூலமாக திரும்பி செல்ல துவங்கியுள்ளனர்.

இன்றைய கூடுதல் விடுமுறை நாளுக்கு பதில், நவ., 19ம் தேதி மாற்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், பள்ளி, கல்லுாரிகள் முழு நாளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து, பள்ளி, கல்லுாரிகள் நாளைதிறப்பு.
 

Tags :

Share via