விபத்தில் சிக்கிய மாணவர்கள்

by Staff / 08-11-2022 11:59:08am
 விபத்தில் சிக்கிய மாணவர்கள்

மஹாராஷ்டிரா மாநிலம், ராய்கர் சாலையில் நடைபெற்ற சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 மாணவர்கள் தேர்வு முடிந்து ஆட்டோவில் வந்துக் கொண்டிருக்கும் போது, மணல் நிரப்பிக் கொண்டு வந்த டிப்பர் லாரி கவிழ்ந்து, அதிலிருந்த மொத்த மணலும் ஆட்டோ மீது கொட்டியது. அதில் 3 மாணவர்களுடன் ஆட்டோ ஓட்டுநரும் உயிரிழந்தார். இவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்தகவலை ராய்கர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via