நடுரோட்டில் காதலியிடம் செருப்படி வாங்கிய இளைஞன்

by Staff / 08-11-2022 05:13:48pm
நடுரோட்டில் காதலியிடம் செருப்படி வாங்கிய இளைஞன்

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள குரை பகுதியில் . ஞாயிற்றுக்கிழமை அன்று ஒர் இளைஞனை மூன்று பெண்கள் சேர்த்து தாக்கி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த நபருடன் இளம்பெண் ஒருவர் தொடர்பு வைத்திருந்துள்ளார்.அவர்கள் இருவரும் அக்டோபர் 12ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி போபாலுக்கு சென்று சில நாட்கள் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்..அந்தப் பெண் அவரின் நடத்தை பிடிக்காமல் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அவர்  தன்னை துன்புறுத்தியதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இந்தநிலையில்,  ஞாயிற்றுக்கிழமை,அந்த நபர் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.இதையறிந்த காதலி பெண், தனது தாய் மற்றும் சகோதரியுடன் சென்று அவரை பிடித்து செருப்பால் அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைதுள்ளாா்ர். அந்த வாலிபர் தன்னை துன்புறுத்தியதாககாவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

 

Tags :

Share via