மெட்ராஸ் ஐ பரவுவதை தடுக்க நடவடிக்கை- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Admin / 21-11-2022 01:10:48pm
மெட்ராஸ் ஐ  பரவுவதை தடுக்க நடவடிக்கை- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்


மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எழும்பூர் கண் மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.பின்புஅவர் மெட்ராஸ் தற்பொழுது பரவிவருவதாகவும் கண் சம்பந்தப்பட்ட எந்த நோயாக இருந்தாலும் கண் மருத்துவரிடம்பரிசோதனை மேற்கொள்ளவேண்டுமென்றும் தாமாக கண்மருந்துகளை பயன்படுத்தக்கூடாது என்றும் அவ்வாறு மீறிமருந்துகளை பயன்படுத்தினால் கண்பார்வை  பறிபோய்விடும்  சூழல் ஏற்பட்டு விடும் என்றும் தினமும் 4,000லிருந்து 4,500
பேர்  கண்  நோய்காரணமாக சிகிச்சை பெௐகிறார்கள் என்றும் ஒரு வீட்டில் ஒருவருக்கு மெட்ராஸ் ஐ  வந்திருந்தால் அவர்பயன்படுத்தி மற்றொரு நபர் பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டார் .இந்த கண் டிசம்பர் மாதம்வரை இருக்கும் என்றும் அதனால் பொது மக்கள் எச்சரிக்கையாக   இருந்து  மெட்ராஸ் ஐ வராமல் காத்துக்கொள்ளுமாறும்கேட்டுக் கொண்டார் .

 

Tags :

Share via