அரசு பள்ளிகளில் கலைத் திருவிழா

by Editor / 23-11-2022 07:49:02am
அரசு பள்ளிகளில் கலைத் திருவிழா

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்பட உள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் பங்கேற்கும் கலைத் திருவிழா போட்டி அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இன்று முதல் தொடங்குகிறது. பள்ளி அளவில் நடக்கும் திருவிழா இன்று முதல் 28ம் தேதி வரையிலும், வட்டார அளவில் 29-ந்தேதி முதல் அடுத்த மாதம் 5ம் தேதி வரையிலும், மாவட்ட அளவில் அடுத்த மாதம் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலும், மாநில அளவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் 9-ந்தேதி வரையிலும் நடக்கிறது.

 

Tags :

Share via