விடுதியில் மின்சாரம் தாக்கி மாணவிகள் படுகாயம்.

by Editor / 27-11-2022 12:32:32pm
விடுதியில் மின்சாரம் தாக்கி மாணவிகள் படுகாயம்.

மேற்கு வங்க மாநிலம் தெற்கு பர்கானாஸில் உள்ள தங்கும் விடுதியில் நேற்று திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது. அதில் 10 மாணவிகள் காயமடைந்துள்ளனர். அவர்களில் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனிடையே விடுதியில் மின் கேபிள் அறுந்து கிடந்ததால் மாணவிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக விடுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் தெரிய வரவில்லை. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via