தீய பழக்க வழக்கத்தை வீட்டில் சொன்ன உறவினரை தாக்கிய நபரை கொலை செய்த நபர்.தானாகவே காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

by Admin / 26-06-2021 12:17:19am
தீய பழக்க வழக்கத்தை வீட்டில் சொன்ன உறவினரை தாக்கிய நபரை கொலை செய்த நபர்.தானாகவே காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

தீய பழக்க வழக்கத்தை வீட்டில் சொன்ன உறவினரை தாக்கிய நபரை கொலை செய்த நபர்.தானாகவே காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ளது ஆய்க்குடி கிராமம் இந்த பகுதியைச் சார்ந்தவர் சிவராமன்.இவர் தென்காசி பொதுப்பணித் துறையில் பணியாற்றி வருகின்றார். இவருடைய மகன் கார்த்திக் இவர் தீய  பழக்கவழக்கங்கள் கொண்டவராக இருந்துள்ளார்.இதனை  இவரது உறவினரான பெரியம்மாள் மகன் பாண்டியராஜ் என்பவர் சிவராமன் வீட்டிலுள்ள கார்த்திக் தாயிடம் தம்பி இந்த மாதிரி தவறான பழக்கவழக்கங்கள் கொண்டுள்ளார். என்று கூறியுள்ளார் இதனைத்தொடர்ந்து கார்திக்குக்கும் பாண்டிராஜுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
 இந்த நிலையில் இன்று மதியம் ஆய்க்குடி தோப்பு கோவில் அருகில் பாண்டியராஜ் தன் வீட்டிலுள்ள ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு  இருந்தபொழுது அங்கு சென்ற கார்த்திக் எப்படி தன் தாயிடம் தன்னைப்பற்றி சொல்லலாம் என்று கூறி தென்னை மட்டையை கொண்டு  பாண்டியராஜன் சரமாரியாக தாக்கியுள்ளார்.தம்பிதானே என பொறுத்த அவர் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பாண்டிராஜ் கையில் வைத்திருந்த அரிவாளை கொண்டு கார்த்திக்கை சராமரியாக வெட்டி கொலை செய்துள்ளார். கொலை செய்த அவர் நேரடியாக காவல் நிலையத்தில் சென்று சரணடைந்துள்ளார். உடனடியாக காவல்துறையினர் தோப்பு கோயில் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த கார்த்திக் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via