சொகுசு பேருந்தில் 5 கிலோ தங்கக் கட்டிகள்,  பறிமுதல்

by Editor / 30-06-2021 04:19:26pm
சொகுசு பேருந்தில் 5 கிலோ தங்கக் கட்டிகள்,  பறிமுதல்

 

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பஞ்சலிங்கால் சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்குச் சென்ற தனியார் சொகுசு பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர்.அதில், முறையான ஆவணங்கள் இல்லாமல் 5 கிலோ 300 கிராம் எடையுடைய தங்கக் கட்டிகள் மற்றும் தங்க ஆபரணங்கள் எடுத்துச் செல்லப்படுவதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, அவைகளை கைப்பற்றி பறிமுதல் செய்த போலீசார், பெங்களூருவைச் சேர்ந்த ஹேம்சந்த் ஜெயின் என்பவரை கைது செய்தனர். அத்துடன், கடத்தலுக்காக தங்கம் எடுத்துச் செல்லப்பட்டதா, எங்கிருந்து தங்கம் பெறப்பட்டது என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via