கார் மற்றும் ஈச்சர் லாரி மோதி விபத்து - 100 வாத்துக்கள் பலி

by Staff / 07-12-2022 02:02:48pm
கார் மற்றும் ஈச்சர் லாரி மோதி விபத்து - 100 வாத்துக்கள் பலி

திண்டுக்கல் மாவட்டம் சேடப்பட்டி அருகே வத்தலகுண்டு செம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் ஈச்சர் லாரி மற்றும் கார் மோதி விபத்தில் பெண் காயமடைந்தார். குச்சனூரில் இருந்து குளித்தலைக்கு வாத்து ஏற்றுக் கொண்டு வந்த ஈச்சர் லாரியும் சபரிமலையில் இருந்து சென்னை செல்வதற்காக வந்து கொண்டிருந்த காரும் ஆத்தூர் ஒன்றியம் சேடப்பட்டி அருகே வத்தலகுண்டு செம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த கார் ஈச்சர் லாரி மீது உரசியது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஈச்சர் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தவிபத்தில் ஈச்சர் லாரியில் இருந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துகள் இறந்தது. மேலும் ஈச்சர் லாரியில் பயணித்த குளித்தலையைச் சேர்ந்த வாசு மனைவி மேரி வயது 35 என்பவர் காயம் அடைந்தார். காரில் பயணித்தவர்கள் எவ்வித காயமும் இன்றி உயிர்த்தப்பினர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பட்டி காவல்துறையினர் காயம் அடைந்த மேரி என்பவரை அவசர ஊர்தி மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via