பெண் வயிற்றில் டவ்வல்: மருத்துவர்கள் அஜாக்கிரதை
உத்தரபிரதேச மாநிலத்தில் நஜ்ரானா என்ற பெண் வயிற்று வலியால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர் மற்றும் ஊழியர்கள் அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். ஆனால் அறுவை சிகிச்சையின் போது அந்த பெண்ணுக்கு வயிற்றில் டவலை மறந்து வைத்து தையல் போட்டுள்ளனர். இதனால் நஜ்ரானாவுக்கு வயிற்றில் வலி ஏற்பட்டது. கடுமையான வயிற்று வலி குறித்து டாக்டரிடம் ஆலோசித்த அவர், அதிக குளிர் காரணமாக இது நடந்ததாக கூறினார். ஆனால் வயிற்று வலி குறையாததால், வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மீண்டும் அறுவை சிகிச்சை செய்து, வயிற்றில் இருந்த டவலை வெளியே எடுத்தனர்.
Tags :