கடையம் தியேட்டரில் ஊழியரை ரசிகர்கள் தாக்கும் காட்சி சி.சி.டி.வி காட்சிகள் - ராணுவ வீரர் உள்பட 4 பேர் கைது
தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையம் அருகேயுள்ள தனியார் தியேட்டரில் பொங்கலை முன்னிட்டு வாரிசு, துணிவு என இரு படங்களும் திரையிட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 15 - ம் தேதி பொங்கல் அன்று நள்ளிரவு காட்சிக்கு நடிகர் விஜயின் வாரிசு படம் பார்க்க ரசிகர்கள் வந்தனர். அப்போது ரசிகர்கள் கேண்டினில் வாமிட் எடுத்ததாக கூறப்படுகிறது. அதனை சுத்தம் செய்ய ஊழியர்கள் கூறினர். இதில் ஊழியர்களுக்கும் ரசிகர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து ரசிகர்கள் தியேட்டரின் முன் பக்க கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இதில் பறந்து வந்த உடைந்த கண்ணாடி கீழக்கடையம் பெரிய தெருவை சேர்ந்த கணேசன் மகன் கோபிநாத் என்ற தியேட்டர் ஊழியரின் கையில் பட்டு பலத்தகாயம் ஏற்பட்டு 20 தையல் போடப்பட்டது.
இதுகுறித்து கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் கடையம் போலீசார் மேல அரியபுரத்தை சேர்ந்த இராணுவ வீரர் ராமச்சந்திரன் என்ற சங்கர், சக்திவேல் (25), ராஜேஷ் (29), மாதவன் (19) ஆகிய 4 பேரை கைது செய்து மேலும் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.
இந்த நிலையில் ஊழியர் மீது ரசிகர்கள் தாக்கும் சம்பவம் தியேட்டரில் உள்ள சி.சி.டி.வி.கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் தற்போது அந்த பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது..
Tags :