ட்ரொன் கேமரா பறக்க புதுச்சேரி காவல்துறை பகுதிகளில் தடை விதிப்பு.

by Editor / 19-01-2023 08:07:12pm
ட்ரொன் கேமரா பறக்க புதுச்சேரி காவல்துறை பகுதிகளில் தடை விதிப்பு.

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகம் மற்றும்  பிரெஞ்சு தூதரகம் மேலே இன்று இரண்டு ட்ரோன் கோமிராகள் பறந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் புதுச்சேரி காவல்துறை உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. கிராண்ட் பஜார் காவல்நிலையம், ஓதியன்சாலை காவல்நிலையம்,உருளையன்பேட்டை , முத்தியால்பேட்டை உள்ளிட்ட 8 காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ட்ரொன் கேமெராக்கள் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via