அண்ணாதான் மண்ணை ஆள்கிறார் முதல்வர் ஸ்டாலின்

by Staff / 31-01-2023 04:35:59pm
அண்ணாதான் மண்ணை ஆள்கிறார் முதல்வர் ஸ்டாலின்

பிப்ரவரி 3ம் தேதி அண்ணாவின் நினைவுநாள் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி தொண்டர்களுக்கு முதலமைச்சர் மடல் எழுதியுள்ளார். அதில் அவர், இன்றும் அண்ணாதான் இந்த மண்ணை ஆள்கிறார். எத்திசையும் அண்ணா எனும் பேரொளி பரவட்டும் இருள் விலகட்டும். அன்னை நிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய பெருமகன் அண்ணா. தமிழ்நாடு வாழ்க என்று மாநிலம் முழுவதும் இன்று முழக்கம் கேட்கிறது. ஒருமைப்பாடு, மதநல்லிணக்கம், பன்முக தன்மையை காக்கும் அரசு அமைய திராவிட லட்சிய சுட தேவை என கூறினார்.

 

Tags :

Share via