பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

by Staff / 01-02-2023 02:33:52pm
பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞருக்கு  20 ஆண்டு சிறை தண்டனை

கரூர் குளித்தலை அடுத்து பழைய ஜெயங்கொண்டபுரம் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் 27-03-22 அன்று கடைக்கு சென்று பேனா, பென்சில் வாங்கிட்டு வரும் போது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஆனந்த் (எ) அறிவானந்தம் நான் பேனா பென்சில் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற அந்த இளைஞரை அருகில் இருந்த பள்ளி காம்பவுண்டில் தாண்டி குதித்து அழைத்துச் சென்ற சிறுவனை அங்கு பாலியல் தாக்குதல் புரிந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவன் தனது பாட்டியிடம் தெரிவித்தார் பின்னர் இதுகுறித்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பப்பட்டார்.இது  குறித்து கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடை பெற்று வந்த நிலையில், 8 வயது சிறுவன்  மீது பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்த் (எ) அறிவானந்ததிற்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் , 3 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இழப்பிடாக ரூ. 1. லட்சத்தி 50 ஆயிரம் வழங்க தமிழக அரசுக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

 

Tags :

Share via