கணவனை கொன்று உடலை புதைத்த மனைவி

by Editor / 21-04-2025 05:16:30pm
கணவனை கொன்று உடலை புதைத்த மனைவி

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மனைவி தன் கணவனைக் கொன்று உடலை புதைத்துள்ளார். அப்பெண்ணின் கணவர் சாய் கடந்த 15 வருடங்களாக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வெறுப்படைந்த மனைவி கவிதா, தனது தங்கை கணவரின் உதவியுடன் மின்சாரம் பாய்ச்சி கணவனைக் கொன்றுள்ளார். பின்னர் உடலை அடக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via