4 நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிக்கும்.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஆகிய இடங்களில் இன்று முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரை வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் வானம் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்ப நிலையை பொறுத்தவரை அதிகபட்சம் 32 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : வறண்ட வானிலை நீடிக்கும்