விஷச்சாரயம் இரண்டு வழக்குகளை கொலை வழக்காக பதிவு

by Staff / 24-05-2023 05:03:23pm
விஷச்சாரயம்  இரண்டு வழக்குகளை கொலை வழக்காக பதிவு

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த நிலையில் இதுதொடர்பான வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டார். அதன்படி, விஷச் சாராயம் தொடர்பான வழக்குகள் செங்கல்பட்டு சிபிசிஐடி அதிகாரி மகேஷ்வரி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஷச் சாராய மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிசிஐடி விசாரணை அதிகாரி மகேஷ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில், இரண்டு வழக்குகளை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via