சுடிதார் அணிய அனுமதி வேண்டும்.. நீதிபதிகள் கோரிக்கை

by Staff / 24-05-2023 04:50:10pm
சுடிதார் அணிய அனுமதி வேண்டும்.. நீதிபதிகள் கோரிக்கை

கேரள மாநில நீதிமன்றங்களில் உள்ள 53 வருட விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என பெண் நீதிபதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து 100க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் விடுத்துள்ள அறிக்கையில், நெரிசல் மிகுந்த நீதிமன்றங்களில் குறிப்பாக கோடை காலங்களில் இறுக்கமான ஆடையுடன் இருப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே தெலங்கானா மாநிலத்தை போன்று கேரளாவிலும் நீதிபதிகள் சுடிதார் அணிய அனுமதி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், பெண் நீதிபதிகளின் இந்த கோரிக்கையை கவனத்தில் எடுத்துக் கொள்வதாக கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via