கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது - மோடி

by Staff / 18-09-2023 01:13:17pm
கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது - மோடி

சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகள் எடுக்கப்பட உள்ளது என்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, “நாட்டில் உற்சாகமான சூழல் நிலவுகிறது. சில நாட்கள் மட்டுமே நடைபெற்றாலும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது கூட்டத்தொடரை உற்சாகமாக நடத்தி அனைவரும் ஆக்கப்பூர்வ பங்களிப்பைத் தர வேண்டும். 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க வேண்டும்” பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via