தூத்துக்குடி கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை முயற்சி

by Staff / 10-02-2023 05:06:28pm
தூத்துக்குடி கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை முயற்சி

தூத்துக்குடி கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ராமநாதபுரம் முல்லை நகரை சேர்ந்தவர் மணிவாசகம் இவரது மகன் அர்ஜுன் சித்தார்த் (19). இவர் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் விடுதியில் தங்கி 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இரவு விடுதியில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த மாணவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அர்ஜுன் சித்தார்த் படிப்பு சரியாக வராதால் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அசோகன், மாணவர் மீது தற்கொலைக்கு முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via