அதிகரித்த பூக்களின் விலை..

by Editor / 11-02-2023 10:38:16am
அதிகரித்த பூக்களின் விலை..

தமிழ்நாட்டில் நிலவி வரும் பனிப்பொழிவு காரணமாகவும், கேரளா மாநிலத்தில் நாளை திருமண நாட்கள்  அதிகமுள்ளதாலும்,தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்,சுரண்டை,சிவகாமிபுரம்,தென்காசி ஆகிய பகுதிகளிலுள்ள மலர் சந்தைக்கு  பிச்சிப்பூ, மல்லிகை பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதாலும் விலை அதிகரித்துள்ளது.பிச்சிப்பூ நேற்று  2000 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 1500-1800 ரூபாய்க்கும், மல்லிகை பூ 1300 ல் இருந்து ஒரே நாளில் 1200 முதல் 1500 வரை ரூபாய் அதிகரித்து அதிகபட்சமாக 2750 ரூபாயாகவும் விற்பனைசெய்யப்படுகிறது.

அதேசமயம்  கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தைக்கு பிச்சிப்பூ, மல்லிகை பூக்களின் வரத்து குறைந்தது. இதனால் பிச்சிப்பூ நேற்று  2000 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 2300 ரூபாய்க்கும், மல்லிகை பூ 1300 ல் இருந்து ஒரே நாளில் 1000 ரூபாய் அதிகரித்து 2300  ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via