வாகைகுளம் விமான நிலையம் விமான நிலைய விரிவாக்க பணி- கனிமொழி கருணாநிதி எம்பி ஆலோசனை.

by Editor / 15-02-2023 03:23:18pm
வாகைகுளம் விமான நிலையம் விமான நிலைய விரிவாக்க பணி- கனிமொழி கருணாநிதி எம்பி ஆலோசனை.

வாகைகுளம் விமான நிலையம் விமான நிலைய விரிவாக்க பணி- கனிமொழி கருணாநிதி எம்பி ஆலோசனை.


தூத்துக்குடி - ஜி.ஆர்.டி விடுதியில் நடைபெற்ற தூத்துக்குடி விமானநிலைய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, புதிதாகக் கட்டப்பட்டுவரும் முனையக் கட்டிடம் மற்றும் விரிவாக்க பணிகளின் நிலை குறித்து ஆலோசனை செய்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், விமானநிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.இந்த கூட்டத்தில் பின்னர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் விமான நிலைய விரிவாக்க பணிகளின் முதற்கட்டமாக ஓடுதளம் பணிகள் அனைத்தும் ஏப்ரல் மாதம்  இறுதிகுள் நிறைவு பெறும்,விரைவில் தூத்துக்குடியில் இருந்து  மாலை, இரவு நேரங்களில்  விமான சேவைகள் இயக்கப்படும்.தூத்துக்குடி விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டுமான பணிகள் அனைத்தும் வரும் செப்டம்பர் மாதம் முழுமையாக முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும்.தூத்துக்குடியில் நடைபெறும் பர்னிச்சர் பூங்காவில் இரண்டு நிறுவனங்கள் கன்பார்ம் செய்யப்பட்டு விரைவில் பணிகளை தொடங்க உள்ளார்கள் மேலும் சில இண்டஸ்ட்ரீஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது விரைவில் அவர்களும் பணிகளை தொடங்குவார்கள்.தூத்துக்குடியில் இருந்து சென்ன்னைக்கு தற்போது ஒரு இரயில் சேவை மட்டுமே உள்ளது  கூடுதல் இரயில் இயக்குவது தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன் மேலும் மதுரையில் நடைபெற இருக்கும் தென்மண்டல ரயில்வே கூட்டத்தில் இதுபற்றி பேச உள்ளேன் என்றார்.

வாகைகுளம் விமான நிலையம் விமான நிலைய விரிவாக்க பணி- கனிமொழி கருணாநிதி எம்பி ஆலோசனை.
 

Tags :

Share via