உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாடு தேமுதிக தலைமை விரைவில் அறிவிக்கும்-விஜய பிரபாகரன்

by Admin / 05-07-2021 05:06:44pm
உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாடு தேமுதிக தலைமை விரைவில் அறிவிக்கும்-விஜய பிரபாகரன்

உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாடு தேமுதிக தலைமை விரைவில் அறிவிக்கும்-விஜய பிரபாகரன்


நாட்டில் பெட்ரோல் விலை உயர்வு மற்றும் கரோனா காலத்தில் மதுக்கடைகள் திறப்பு உள்ளிட்டவைகளைக் கண்டித்து திருச்சியில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நிருபர்களிடம் கூறியது: தேமுதிக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாட்டு வண்டி கொண்டு வருவதற்கு கூட போலீசார் தடை விதித்த காரணம் தெரியவில்லை.மாட்டு வண்டி கொண்டு வருவதால் போலீசாருக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா என்பதை அவர்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும். மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும். தேர்தல் நெருங்கும் போது தேமுதிகவின் நிலைப்பாட்டினை கட்சித் தலைமை அறிவிக்கும் என்றார்

 

Tags :

Share via