கஞ்சா விற்பனை செய்த டிரைவர் கைது

by Staff / 24-02-2023 05:14:43pm
கஞ்சா விற்பனை செய்த டிரைவர் கைது

பொள்ளாச்சி அருகே தாளக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து அப்பகுதிக்கு சென்று போலீசார் கண்காணித்து வந்தனர்
அப்போது தாளக்கரை புது காலனி பகுதியில் வீட்டில் வைத்து ஒரு நபர் கஞ்சா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது அதே பகுதியை சேர்ந்த விஜய் என்பதும் ஓட்டுனராக பணியாற்றுபவர் கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது பின்னர் அவரிடம் இருந்த 600கிராம் கஞ்சாவை பறிமுதல் போலீசார் விஜயை கைது செய்து நீதிமன்றத்தில் படுத்தி சிறையில் அடைத்தனர்

 

Tags :

Share via