கணவன் மனைவியிடையே தகராறு- கணவர் தற்கொலை

by Staff / 03-03-2023 04:50:21pm
கணவன் மனைவியிடையே தகராறு- கணவர் தற்கொலை

கோவை இருகூர் பகுதியை சேர்ந்தவர், 55 வயதான துரை, இவரது மகன், 31 வயதான சதிஷ்குமார், இவர் கூலி வேலை செய்து வருகிறார், மேலும் இவர், மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது, மேலும் தனது மனைவியின் மீது சந்தேகம் காரணமாக, குடிபோதையில், சதிஷ்குமார் தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார், இதே போன்று கடந்த வாரத்தில், கணவன் மனைவி இடையே தகறாறு எற்பட்டது இதனை தொடர்ந்து இருவரையும், துரை சமரசம் செய்து வைத்துள்ளார், இந்த நிலையில் துரை, தனது குடும்பத்தினருடன் அவிநாசிக்கு கடந்த 1ம்தேதி சென்றுள்ளார், அப்பொழுது துரையின் மருமகள் அவரை தொலைபேசியில் அழைத்து, உங்களது மகன் சதிஷ்குமார், குடிபோதையில் தன்னுடன் தகராறு செய்வதாகத் தெரிவித்தார், இதனை தொடர்ந்து துரை தனது மருமகளை அவரது தாய் வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார், இதனை தொடர்ந்து சதிஷ்குமாருடன் சண்டை போட்ட அவரது மனைவி தனதுத தாய் விட்டிற்க்கு சென்றார், இதனால் மனவேதனை அடைந்த சதிஷ்குமார் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், அவிநாசி சென்ற துரை நேற்று விட்டிற்க்கு வந்த பொழுது சதிஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து இது குறித்து சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via