சி.விஜயபாஸ்கர் வழக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

by Staff / 13-07-2024 12:18:53pm
சி.விஜயபாஸ்கர் வழக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் 2013-2021 வரை 8 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

Tags :

Share via