தடுப்பூசியை கண்டுப்பிடித்தவர் மர்ம முறையில் மரணம்

by Staff / 04-03-2023 05:03:40pm
தடுப்பூசியை கண்டுப்பிடித்தவர் மர்ம முறையில் மரணம்

ரஷ்யாவில் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றியதாக கூறப்படும் விஞ்ஞானி ஆன்ட்ரி போடிகோ பெல்டால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மாஸ்கோவில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்த அவர், கடந்த வியாழக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விசாரணையில், அவர் இருதரப்பு தகராறில் பெல்டால் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்து, 29 வயது இளைஞரை சந்தேகத்தின்பேரில் பிடித்து ரஷ்ய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via