சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் பிரஷாந்த் கிஷோர் கேள்வி

by Staff / 10-03-2023 03:46:50pm
சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் பிரஷாந்த் கிஷோர் கேள்வி

வட இந்தியர் பாதுகாப்பு விவகாரம் தமிழ்நாட்டில் உச்சம் பெற்றுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக பிரஷாந்த் கிஷோர் வீடியோ ஒன்றை பகிர்ந்து ள்ளார். அதில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “இந்திக்கார பய எல்லாம் தெறிச்சு ஓட போறான். நான் ஆட்சிக்கு வந்தால் ஒரே வாரத்தில் அவன் எல்லாம் பெட்டியை கட்டிக்கொண்டு போய்விடுவான். எத்தனை பேரை எங்கே வைத்து வெளுப்பேன் என்று தெரியாது” என பேசி உள்ளார். மேலும் இந்த வீடியோவை பகிர்ந்த பிரஷாந்த் கிஷோர் சீமான் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via