போக்ஸோ வழக்கில் இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

by Editor / 13-03-2023 11:05:16pm
போக்ஸோ வழக்கில் இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மேலக்கலங்குடி பகுதியை சேர்ந்தவர் மணி என்ற மணிகண்டன் (32). இவர் மீது மாந்திரீகம் செய்து மாணவியை மயக்கி கர்ப்பமாக்கிய வழக்கில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.இதனைத்தொடர்ந்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் இன்று மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via