சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவன் கைது

by Staff / 22-03-2023 03:51:09pm
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவன் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, அவரது காதலர் ஸ்ரீநிசாந்த் (வயது 19), ஆசை வார்த்தை கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் ஸ்ரீநிசாந்தை கைது செய்தனர்.தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஸ்ரீநிசாந்தின் செயலுக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் ஓருவரும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதன்பேரில் அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே அவரை போலீசார் கைது செய்தனர். அவர் 9-ம் வகுப்பு மாணவர் என்பதால், சிறார் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தப்பட்டு நெல்லையில் உள்ள சிறுவர்கள் சீர் திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
 

 

Tags :

Share via