ராகுல் காந்தி இன்று மதியம் ஒரு மணி அளவில் செய்தியாளர்களை சந்திக்கின்றார்

by Admin / 25-03-2023 11:44:37am
 ராகுல் காந்தி இன்று மதியம் ஒரு மணி அளவில் செய்தியாளர்களை சந்திக்கின்றார்

கேரளா வயநாடு தொகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட  ராகுல் காந்தி கடந்த  பாராளுமன்ற தேர்தலில் மோடி என்கிற சமூகத்தை திருடர்கள் என்று வர்ணித்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டு சூரத் நீதிமன்றம் நேற்று ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து தீர்ப்பளித்ததோடு ஒரு மாதம் முன் பிணையையும் அறிவித்து மேல் முறையீட்டுக்கும் அனுமதி அளித்தது  இந்நிலையில்,இந்தியா முழுவதும்  காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்  போராட்டம் நடத்தி வருவதோடு பல்வேறு  மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜக அரசின் இந்த போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றார்கள்  இதனைத் தொடர்ந்து  பாராளுமன்ற அலுவலகம் அவர் எம்.பி பதவி நீக்கம் செய்து வயநாடு தொகுதி காலியானதாக அறிவித்தது .இதன்காரணமாக, ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று மதியம் ஒரு மணி அளவில் செய்தியாளர்களை சந்திக்கின்றார்

 

Tags :

Share via