ஒன்றரை லட்சத்துக்கு ஏலம் விடப்பட்ட பலாப்பழம்
ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் பலாப்பழம் ஒன்று பிரபலமாகியுள்ளது. எடின்பரோவில் உள்ள சிரோ மலபார் தேவாலயத்தில் ஒரு பலாப்பழம் ஏலம் விடப்பட்டபோது, அது 1,400 பவுண்டுகளுக்கு கிடைத்தது. இந்திய மதிப்பில் சுமார் 1,40,000 ரூபாய் கிடைத்துள்ளது. எடின்பரோவில் உள்ள புனித அல்போன்சா மற்றும் அந்தோணி தேவாலயத்தில் ஏலம் நடைபெற்றது. வெறும் 29 வினாடிகள் நடந்த ஏலத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தேவாலயத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது. ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணம் தொண்டு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்தனர்.
Tags :