மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளி கைது.

by Staff / 29-03-2023 01:23:48pm
மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளி கைது.

மதுக்கரை அருகே வசிப்பவர் காளீஸ்வரன், 41: கூலி தொழிலாளி. இவர் தனது நண்பரின் வீட்டிற்கு சென்றார்.
பள்ளியில் பயிலும், 17 வயது மகள் மட்டும் வீட்டிலிருந்தார். தண்ணீர் கேட்ட காளீஸ்வரன், வீட்டிற்குள் சென்றுள்ளார்.அங்கு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். உடனே சத்தமிடவும், அங்கிருந்து தப்பினார். மாணவியின் புகாரில் பேரூர் சரக அனைத்து மகளிர் போலீசார், போக்சோசட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். தப்பியோடிய காளீஸ்வரனை கைது செய்தனர்.

 

Tags :

Share via