அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்
நாட்டில் நிலவும் தொடர் நிலநடுக்கங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த நிலையில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக இருந்தது. போர்ட் பிளேயரில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.
Tags :