திருப்பூரில் 26 வங்கதேசத்தினர் கைது.. போலி ஆதார் அட்டைகள் பறிமுதல்

திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தெரியவந்த நிலையில், பல்லடம் டி.கே.டி மில் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது, சிலர் போலி ஆதார் அட்டை பயன்படுத்தி, பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து போலி ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்து, சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags :