ஓர்க்ஷாப்பில் தீவிபத்து: 4 பைக்குகள் எரிந்து சேதம்

by Staff / 03-04-2023 04:06:20pm
ஓர்க்ஷாப்பில் தீவிபத்து: 4 பைக்குகள் எரிந்து சேதம்

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை தெப்பக்குளம் தெருவைச் சேர்ந்தவர் காசி (40), இவர் அந்த பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். நேற்று இரவு வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றார். திடீரென இரவு 11 மணியளவில் கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து தகவலின் பேரில் ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் கடையில் இருந்த 4 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம் ஆனது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பசுவந்தனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via