கடலுக்கு கொண்டு சென்ற விசைப்படகு சரிந்து விழுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

by Editor / 19-04-2023 05:29:30pm
கடலுக்கு கொண்டு சென்ற விசைப்படகு சரிந்து விழுந்ததில்  2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடியில் புதிய விசைப்படகை கடலுக்கு கொண்டு சென்றபோது  சரிந்து விழுந்ததில் படகு உரிமையாளர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். 

தூத்துக்குடி துறைமுகம் சாலையில் படகு கட்டும் தளம் உள்ளது. இங்கு தூத்துக்குடியைச் சேர்ந்த அண்டோ என்பவருக்கு சொந்தமாக புதிய விசைப்படகு கட்டப்பட்டு இன்று காலை பூஜைகள் செய்யப்பட்டு அதை விசைப்படகு மீன்பிடி துறைமுக பகுதிக்கு கடலில் இறக்குவதற்காக தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்  அப்போது விசைப்படகு திடீரென சரிந்து விபத்துக்குள்ளானது. இதில் விசைப்படகு இறக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படகு உரிமையாளர் அண்டோ, மற்றும் தொழிலாளி ஆகிலன் ஆகியோர் சிக்கி படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை சக தொழிலாளர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
 

 

Tags :

Share via