தமிழ்நாட்டில் நிரந்தரமாக திமுக ஆட்சிதான்

by Staff / 21-04-2023 02:15:14pm
 தமிழ்நாட்டில் நிரந்தரமாக திமுக ஆட்சிதான்

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இருதினாலான இன்று, காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார் நாங்கள் தேர்தலில் மட்டும் வெல்லவில்லை, மக்களின் மனங்களையும் வென்று அவர்களின் மனங்களில் குடியிருக்கின்றோம். திமுகதான் நிரந்தரமாக ஆள வேண்டும் என்று மக்கள் முடிவெடுக்கும் வகையில், 2 ஆண்டு காலமாக ஆட்சியை நடத்தி வருகிறோம்.

ஆட்சிக்கு வந்தபோது கடும் நிதி நெருக்கடி இருந்த நிலையிலும், பல மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்து மகத்தான சாதனை புரிந்துள்ளோம். ஸ்டாலின் அரசாகவோ, திமுக அரசாகவோ இல்லாமல், ஒரு இனத்தின் அரசாக, கொள்கையின் அரசாக இருக்கிறது.தமிழ்நாட்டில் சாதி, மதச்சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறை இல்லை, கலவரங்கள் இல்லை, துப்பாக்கிசூடு இல்லை. இதன் அடையாளமாகத்தான் தொழிற்சாலைகள், தொழில் முதலீடுகள் இங்கே வருகின்றன.

பிற மாநிலங்களில் நடந்த சம்பவங்களை தமிழ்நாட்டில் நடந்தது போல சித்தரித்து புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரபப்பட்டன. உடனடியாக ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தினேன்.பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை தொடர்புகொண்டு புலம் பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து உறுதி அளித்தேன்.

 

Tags :

Share via