கேரளா படகு கவிழ்ந்து விபத்து முதலமைச்சர் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி

by Admin / 08-05-2023 03:23:58pm
 கேரளா படகு  கவிழ்ந்து விபத்து முதலமைச்சர் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி

நேற்று  இரவு  கேரளா  மாநிலம் மலப்புரம் அருகே உள்ள தனூர் ஒட்டம்பூர் துவால்திரா என்ற பகுதியில் படகில் பயணித்த சுற்றுலா பயணிகள்c கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பயணியர் படகில் 40க்கு மேற்பட்ட பயணிகள் பயணித்ததாக தெரிய வருகிறது .வழக்கமாக ,கேரளா சுற்றுலா துறையால் இந்த படகு சவாரி  காலையிலிருந்து மாலை ஐந்து வரை மட்டுமே என்கிற நிலையில், இந்த விபத்துக்குள்ளான படகு  இரவு 7 மணிக்கு விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இப்ப படகு விபத்தில் உயிரிழந்தவர்களில் 22 பேர் பெண்கள் என்றும் ஐந்து  பேர் குழந்தைகள் என்றும் இன்னும் மற்றவர்களை தேடும் பணியில் காவல்துறை மற்றும் மீட்புப் படையினர்  தீவிரமாக  ஈடுபட்டு தேடி வருகின்றனர் . இந்த  விபத்து குறித்து அறிந்ததும்  கேரள முதலமைச்சர் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்திற்கும் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். இதனை  தொடர்ந்து  இந்திய பிரதமர் மோடியும்  படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via