புயலில் சிக்கி 29 பேர் பலி
மோக்கா புயல் மியான்மரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தகவல் தொடர்பு அமைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கடலோர பகுதிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த சூறாவளி காரணமாக மியான்மரில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். தாழ்வான பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்புப் படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வருகின்றனர். நிவாரண முகாம்களும் தொடங்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் அங்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
Tags :