மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்த அகிலேஷ் யாதவ்
2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்குத் தங்கள் கட்சி ஆதரவளிக்கும் என்ற மேற்குவங்க முதல்வரும், டிஎம்சி தலைவருமான மம்தா பானர்ஜியின் கூற்றுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்தார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அகிலேஷ், 'ஒரு மாநிலத்தில் வலுவாக உள்ள கட்சி அங்கு தேர்தலில் போட்டியிட வேண்டும். பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் பிற கட்சிகளும் இதே கருத்தைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸுக்கு ஆதரவளிக்கும் மம்தாவின் முடிவை ஆதரிக்கிறேன்' என கூறியுள்ளார்.
Tags :