மோச்சா புயல்.. 145 பேர் பலி

by Staff / 20-05-2023 12:33:09pm
மோச்சா புயல்.. 145 பேர் பலி

மியான்மரில் மோச்சா புயல் பெரும் அழிவை ஏற்படுத்தியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 145 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் 4 வீரர்கள், 24 உள்ளூர்வாசிகள் மற்றும் 117 ரோஹிங்கியாக்கள் உள்ளடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது. இதேவேளை, 209 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக தகவல் தொடர்பு அமைப்பு முற்றிலும் முடங்கியுள்ளது. நிவாரண பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.

 

Tags :

Share via